சத்தீஸ்கர் மாநில வனத்துறை காலநிலை மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கேதர்கஷாப் குடும்பத்தினருடன் இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட பின் , இன்று காலை காஞ்சிபுரம் வந்த நிலையில் மாலை சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் தனது குடும்பத்தினருடன் சிறப்பு சாமி தரிசனம் கொண்டார்.
அவருக்கு திருக்கோயில் சார்பாக திரு பிரசாதங்கள் மற்றும் பூமாலைகள் வழங்கப்பட்டு அர்ச்சனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் சிறப்பு அர்ச்சனைகள் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலும் சிறப்பு அர்ச்சனைகள் மேற்கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அவருக்கு காஞ்சிபுரத்தில் காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது பாஜக நிர்வாகிகள் டாக்டர் கணேஷ் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




