Close
மார்ச் 7, 2026 4:26 மணி

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!

கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் ஆச்சார்யர்கள்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உட்க்கடை, குறவன்குளம், வடக்கு தெருவில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த சிறப்பு யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூன்று கால யாக பூஜைகளுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், பேரூர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உறவின்முறை சங்கத்தினர், வடக்கு தெரு, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top