நாமக்கல்:
தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு, ரூ. 2.40 லட்சம் இழப்பீட்டுத்தொகை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நøடெபற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 640 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
அவற்றைப் பரிசீலைன செய்த கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், கடந்த மே 28 முதல் ஜூன் 18 வரை மாவட்டத்தில், தெரு நாய் கடித்து உயிழந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 14 பேருக்கு மொத்தம் ரூ. 2.40 லட்சம் இழப்பீடு வழங்கினார். அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்த கலெக்டர், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், சமூகப்பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




