Close
மார்ச் 7, 2026 2:51 மணி

தென்காசி மேலகரம் பேரூராட்சியில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் : மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

நிறம் மாறிய குடிநீருக்கு புகார் மனு அளித்த கிராம மக்கள்

மேலகரம் பேரூராட்சியில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் வரக்கூடிய தண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு . இந்த மாசுபட்ட தண்ணீரால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தோல் நோய் ஏற்படுவதாகவும் வேதனை.

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டுக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் நெல்லிக்காய் வைத்து லேகியம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கழிவு நீர் அனைத்தும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் போர்வெல் மற்றும் கிணற்று நீரில் கலந்து கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி இடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கை வலியுறுத்தும் விதமாக மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் வருகின்ற தண்ணீரை பாட்டிலில் அடைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

தாங்கள் இந்த தண்ணீரை இரண்டு வருடங்களாக குளிப்பதற்கும் கழிப்பிட வசதிகளுக்கும் பயன்படுத்தி வருவதால் சிறுவர்கள் மட்டும் பெண்களுக்கு நோய் தொற்று, தோல் வியாதி ஏற்படும் அபாயம் உண்டாகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்கள் பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top