சாரல் திருவிழாவை முன்னிட்டு சாரல் மாரத்தானை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் சாவித் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான சாரல் திருவிழா வருகின்ற 20 – ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு சாரல் விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது. இதனை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆண்களுக்கு தென்காசி குத்துக்கல் வலசை பகுதியில் தொடங்கி 10 கிலோமீட்டர் வரை மாரத்தான் நடைபெற்றது.
அதேபோல் பெண்களுக்கு முத்துக்கள் வலசை பகுதியில் தொடங்கி 5 கிலோமீட்டர் வரை மாரத்தான் நடைபெற்றது.
பெண்கள் பிரிவில் ரெட்டியார்பட்டி பகுதியை சார்ந்த சௌமியா முதல் பரிசும், ஆலங்குளம் பகுதியைச் சார்ந்த பாக்கியவதி இரண்டாவது பரிசும், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த வித்தியா மூன்றாவது பரிசும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் கடையநல்லூரைச் சார்ந்த பசுபதி முதல் பரிசும், திருநெல்வேலி பகுதியை சார்ந்த யஸ்வந்த் ராஜ் இரண்டாவது பரிசும், இலஞ்சி பகுதியை சார்ந்த விக்னேஸ்வரன் மூன்றாவது பரிசும் பெற்றனர்.




