Close
மார்ச் 7, 2026 4:41 மணி

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் : 150 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது..!

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 150 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை களையவேண்டும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 500 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர். பின்னர், கோரிக்கைளை வலியுறுத்தி, டிட்டோஜாக் அமைப்பின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, மணிக்கூண்டு அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முத்துசாமி போராட்டத்தை துவக்கி வைத்தார்.

மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் முருகசெல்வராசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், சங்கர், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, கார்த்திக்கேயன், கலைச்செல்வன், டிட்டோஜாக் நிர்வாகிகள் மற்றும் திரளான ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் சாலை மறியலில் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நாளை 18ம் தேதியும் மறியல் போராட்டம் நடைபெறும் என டிட்டோஜாக் அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top