Close
மார்ச் 7, 2026 11:30 காலை

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

மழை -கோப்பு படம்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 23ம் தேதி வரை ஆகிய 5 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை குறைந்துள்ளது. நாளை 19ம் தேதி முதல் வரும் 23ம் தேதி தேதி வரை 5 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 31 முதல் 34 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும்.

குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 22 டிகிரி முதல் 25 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 60 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் மேற்கு, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 14 முதல் 18 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நாளை ஜூலை 19ம் தேதி 1 மி.மீ., 20ம் தேதி 6 மி.மீ., 21ம் தேதி 14 மி.மீ., 22ம் தேதி 7 மி.மீ., 23ம் தேதி 7 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோழிப்பண்ணையாளர்களுக்கு: கடந்த வாரம் சில பண்ணைகளில் வெள்ளைக்கழிச்சி நோயின் தாக்கத்தால் கோழிகள் இறந்துள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top