நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக விமலா பொறுப்பேற்றார்.நாமக்கல் போலீஸ் எஸ்.பியாக பணியாற்றி வந்த ராஜேஷ்கண்ணன், சென்னை சிஐடி பிரிவு எஸ்.பியாக மாறுதல் பெற்றுச் சென்றார். சென்னை கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக பணியாற்றி வந்த எஸ்.விமலா நாமக்கல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று, நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு வந்த விமலா, எஸ்.பியாக பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.




