Close
மார்ச் 7, 2026 4:41 மணி

மோகனூர் அருகே ரூ. 63 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது..!

மோகனூர் அருகே கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட திருப்பதி, விக்னேஷ்வரன், சஞ்சய் ஆகியோர்.

நாமக்கல்:

மோகனூர் அருகே ரூ. 63,600 ஆயிரம் மதிப்புள்ள, 6.3 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. விமலா, மதுவிலக்கு ஏடிஎஸ்பி தனராசு ஆகியோர் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ. செல்லதுரை ஆகியோர், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து, ப.வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் தீர்தாம்பாளையம் அருகே மதுவிலக்கு சம்மந்தமாக வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரே ஸ்கூட்டரில் 3 பேர் சென்றனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் ஸ்கூட்டரில் வைத்திருந்த கைப்பையில் 6.360 கிலோ மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் எருமப்பட்டியை சேர்ந்த திருப்பதி (23), விக்னேஷ்வரன் (20) சேந்தமங்கலத்தை சேர்ந்த சஞ்சய் (19) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் ரூ. 63 ஆயிரத்து 600 மதிப்புள்ள கஞ்சாவை அவர்கள் விற்பனை செய்வதற்காக கடத்திச்சென்றது தெரியவந்தது. கஞ்சாவையும், ஸகூட்டரையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top