நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில், சுகாதாரத்துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ், புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களில், ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதன்படி, துணை நர்ஸ், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (பெண்) 6, பார்மசிஸ்ட் -1. லேப் டெக்னீஷியன் -1, நர்சுகள் -86, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், துணைப் பணியாளர் -3, தொழில் முறை சிகிச்சையாளர் – 1, சமூக சேவகர் -1, நடத்தைக்கான சிகிச்சை சிறப்பு கல்வியாளர் -1, ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர் நிலை 3ல் -1 ஆகிய பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், தேசிய நலவாழ்வு குழும விதிகளின்படி, முற்றிலும் தற்காலிகமாக மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இப்பதவிகளுக்குரிய வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் இதர தகவல்கள், நாமக்கல் மாவட்ட வெப்சைட் (நாமக்கல்.என்ஐசி.இன்), கலெக்டர் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பணிளுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் உரிய படிவத்தில், கல்வித்தகுதி, அனுபவச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, வரும், ஆக. 4, மாலை 5 மணிக்குள், மாவட்ட சுகாதார அலுவலர், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் -637003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




