தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி – செங்கோட்டை மாநில சாலையான (எண் 39) இது தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தை இணைக்ககூடியது இச்சாலையில் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்கெட் கிழக்கே இதே சாலையில் மனமகிழ் மன்றம் திறக்க உள்ளதாகவும் அதே போல் தினசரி சந்தையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் ஆவுடையானூர் சாலையில் மற்றொரு மனமகிழ் மன்றம் திறக்க உள்ளதாகவும் அறிந்தேன்.

முதலில் கூறப்பட்ட மனமகிழ் மன்றம் எம்எஸ்பிவி பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது இதில் 1000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் அதே போல் தினசரி சந்தைக்கு 100 க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன இதன் எதிரில் தனியார் மருத்துவமனை உள்ளது,
ஆவுடையானூர் சாலையில் உள்ள அமைய உள்ள மனமகிழ் மன்றம் அருகில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி நிறுவனம் உள்ளது இதில் 1000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த பள்ளிக்கும் மனமகிழ் மன்றத்திற்கும் 200 மீட்டர் தொலைவில் உள்ளது எனவே இந்த மன்றங்களுக்கு அனுமதி அளித்தால் மாணவ மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள், என பலதரப்பட்ட மக்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவே இந்த மனமகிழ் மன்றம் துவங்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் ; மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனமகிழ் மன்றம் திறக்க அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் பொதுச்செயலாளர் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் என அடுத்தடுத்த போராட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுப்பாராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், பாலகிருஷ்ணன், குணம் என்ற உத்திரகுண பாண்டியன், நகர கழக செயலாளர் சுடலை, சங்கர், இலஞ்சி பேரூர் கழக செயலாளர் காத்தவராயன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பரசுராமன், சேர்மபாண்டி, வழக்கறிஞர் ரெங்கராஜ், திருமலைக்குமார், சதிஷ், உமா மகேஸ்வரன், அஸ்வின், நகர கழக அவைத்தலைவர் முத்துக்குமாரசுவாமி, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வெள்ளப்பாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.




