Close
மார்ச் 7, 2026 4:41 மணி

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு : 6-வது நாளாக குளிக்க தடை..! தர்ப்பணம் கொடுக்க குவிந்து வரும் பொதுமக்கள்…!

ஆடி அமாவாசையையொட்டி குற்றாலத்தில் குவியும் பக்தர்கள்

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தற்போது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக, ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கினால் தமது முன்னோர்களின் ஆசி நேரடியாக கிடைக்கும் என்பது என ஐதீகம் கூறும் நிலையில், இன்றைய தினம் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தற்போது குற்றாலத்தில் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், எண்ணையும் படைத்து அவர்களை வழிபட்டு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ள நிலையில் அருவியில் புனித நீராடாமல் வீட்டிலே குளித்துவிட்டு அருவிக்கரையில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top