Close
மார்ச் 7, 2026 3:17 மணி

குற்றாலம் சாரல் திருவிழாவில் மலர் கண்காட்சி : மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு..!

குற்றாலம் சாரல் மலர் கண்காட்சி

தென்காசி மாவட்டத்தில் அரசு சுற்றுச்சுழல் பூங்கா, ஐந்தருவியில் குற்றாலம் சாரல் திருவிழா மலர் கண்காட்சி பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க(24.07.2025), (25.07.2025) ஆகிய இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் சீசன் களைகட்டிய நிலையில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சாரதத் திருவிழா 20ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,

சாரல் திருவிழா மலர் கண்காட்சி – 2025 அரசு சுற்றுச்சுழல் பூங்கா, ஐந்தருவியில் 20.07.2025 முதல் 23.07.2025 வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பழங்கள். காய்கறிகள், மலர்கள் மற்றும் வாசனை பொருட்களை கொண்டு தமிழ்நாடு பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பலவகைப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் கருத்துக்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க மலர் கண்காட்சி அரங்கினை மேலும் 2 நாட்கள் (24.07.2025) மற்றும் (25.07.2025) நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், செய்து குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top