Close
மார்ச் 7, 2026 4:24 மணி

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன்களை சிறப்பு திட்டத்தின் கீழ் தீர்வு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..!

கோப்பு படம்

நாமக்கல்:

கூட்டுறவு வங்கிகளில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதவாது:

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், கூட்டுறவு சங்கங்களில், பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால கடன் பெற்று, 31.12.2022-ல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீர்வுத் திட்டம்-2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து இணைப்பு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு தவணை தவறி. 31.03.2023 அன்றோ, அதற்கு முன்போ செயல்படாத ஆஸ்தி (என்பிஏ) என வரையறுக்கப்பட்ட கடன்களை இத்திட்டத்தின்கீழ் தீர்வு செய்து கொள்ளலாம்.

இச்சிறப்புத் திட்டத்தின்கீழ், 9 சதவீதம் சாதாரண வட்டியுடன் மொத்தமாக, அரசு உத்தரவு வெளியிடப்பட்ட 24.06.2025 முதல் 3 மாதத்திற்குள், ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம். கடன்தாரர்கள், வட்டிச்சுமையை கணிசமாக குறைக்கும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி, 9 சதவீதம் சாதாரண வட்டி விகிதத்தில், நிலுவைத் தொகையை செலுத்தி தங்களது கடன்களை தீர்வு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top