Close
மார்ச் 7, 2026 6:08 மணி

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயர் : தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு கோரிக்கை..!

மாநிலத் தலைவர் அதரக்கட்டு லூர்து நாடார்

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அதரக்கட்டு லூர்து நாடார் விடுத்துள்ள அறிக்கையில்

தூத்துக்குடி மாவட்டம் வாகை குளத்தில் அமைந்துள்ள விமான நிலையம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த விமான நிலையத்திற்கு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றது. தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு இந்த விமான நிலையம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்த விமான நிலையத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை முன்வைத்த நிலையில் தமிழக அரசு இந்த விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 600.97 ஏக்கர் நிலப்பரப்பை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்தது. அதன் அடிப்படையில் இந்த விமான நிலையம் தற்போது 381 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விமான நிலையத்தை ஜீலை 26 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 8 மணிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கின்றார்கள். தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி மாவட்ட மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் இந்த விமான நிலையத்திற்கு தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய பத்ம ஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சர்வதேச விமான நிலையம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சூட்ட வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top