Close
மார்ச் 7, 2026 4:25 மணி

கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காப்பது எப்படி : நாமக்கல்லில் 3 நாட்கள் இலவச பயிற்சி..!

கோப்பு படம்

நாமக்கல் :

கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காப்பது எப்படி என்பது குறித்த இலவச பயிற்சி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மாநில மன்றத்தின் நிதியுதவியுடன், மாடுகளை மடிநோயிலிருந்து பாதுகாப்பது எப்படி என்ற பயிற்சி வரும் ஆகஸ்டு 6, 7 மற்றும் 8 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. கறவை மாடுகள் வளர்க்கும் பெண்களுக்காக இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சியில் பங்கு பெற விரும்புவோர், கால்நடை மருத்துவ சிகிச்சைத்துறையின் துறைத் தலைவரை 9443252942 என்ற செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 30 பேர் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முன்பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் வருகிற 31ம் தேதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top