Close
செப்டம்பர் 19, 2024 10:45 மணி

தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவு… தமுஎகச இரங்கல்

இரங்கல்

தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவுக்கு தமுஎகச புதுக்கோட்டை மாவட்டக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது

தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவுக்கு தமுஎகச புதுக்கோட்டை மாவட்டக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் நிர்வாகி கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்ட இரங்கல்செய்தி:

தமிழறிஞர் கண.சித்சபேசன்  (1934-2022)  17.4.2022 -இல் மறைந்தார். நகைச்சுவையுடன் சீரிய சிந்தனைக்கும் வித்திட்டவர். ஆன்மீக வழி நிற்பினும், அறிவியல் கண்ணோட்டம் கொண்டவராகவே திகழ்ந்தார்.

தமது மாணாக்கர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அண்மையில் நிகழ்த்திய திருக்குறள் பொருட்பால் கட்டமைப்பு முறை உரையை மருத்துவமனைப் படுக்கையிலிருந்தபடியே கேட்டது நெகிழ்வான தருணம்.

தமது ஆசிரியர் நிலை கண்டு கண்கலங்கியபடியே ஓய்வெடுக்குமாறு விளித்துவிட்டு, தமது சிறப்புரையைத் தொடர்ந்தார் பாப்பையா அவர்கள்.தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய இணையவழிக் கூட்டம் அது.. அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top