Close
செப்டம்பர் 20, 2024 1:19 காலை

தற்போது வேண்டாமே அக்னிப் பரிட்சை…

பரிட்சை

வேண்டாமே அக்னி பரிட்சை

அக்னிப் பரிட்சை…கொரோனாவின் கோரத்தாண்டவத்தின் பிடி தளர்ந்த பிறகு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கி, கடந்த நான்கு மாதங்களாகத்தான் சீராக இயங்கி வருகின்றன.

கொரோனா கால கற்றல் இழப்புகள்ஈடுசெய்ய முடியாத அளவிற்கு இருந்தாலும் கூட,அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சியில்அரசும் ஆசிரியர்களும் போராடிக் கொண்டிருக் கின்றனர்.

வழக்கமாகப் பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரலுக்குள் முடிவடைந்து விடும்.ஆனால், நீண்ட விடுமுறை
நிறைய கற்றல் இழப்புகள் என சவால்கள் நிரம்பியிருக்கும் சூழலில் மாணவர்களின் கற்றலுக்கு சற்றே வழி விட்டும்,
வாய்ப்புக் கொடுத்தும் தேர்வை மே மாதத்தில் நடத்த அரசு முடிவெடுத்து, நாளை முதல் தொடர இருப்பது இக்காலத்திற்கு மிகச் சரியான முடிவே ஆகும்.

ஏனெனில் ஈராண்டுகளாக தேர்வே இல்லாமல் தேர்ச்சி என்பதில் மாணவர்களுக்கு கற்றல் என்பதில் கவனம் குறைந்து போய்விட்டதென்பது உண்மை. எனவே எப்படி யேனும் நடத்திவிட வேண்டும் என்னும் சிந்தனை ஆரோக்கியமான சிந்தனையே ஆகும்.

கோடையில் மாணவர்கள் தேர்வை எழுதுவதென்பதும், ஆசிரியர்கள் இக்காலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதென்பதும் சவாலானதுதான் என்றாலும் கூட,மாணவர்களின் எதிர்காலம் கருதி, அதற்கான நிறையத் திட்டமிடல்களோடு களம் இறங்கியிருக்கிறது கல்வித்துறை..

அதே நேரத்தில்…பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களான1 முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கொரோனா கால இடைவெளிக்குப் பிறகு ஏற்பட்ட கற்றல் இழப்புகளையும்,கற்றல் இடைவெளியையும் ஈடுசெய்வதில் இன்னும் ஆசிரியர்கள் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை.

காரணம்..மாணவர்களது மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு மத்தியில், பள்ளி தொடங்கிய நாள் முதல்,
பயிற்சிகளோடும், தொழில் நுட்பங்களோடும் போராடிக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு மாணவர்களோடு செலவழிக்க, இந்தக் குறுகிய காலம் போதுமானதாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

வழக்கமாக இந்நேரம் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டி ருக்கும். ஆனால் இதுவரை இங்கு அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு , கற்றல் இழப்பைக் காரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். உண்மை என்னவெனில் விடுமுறை என்பது தேர்வுக்கான விடுமுறை அல்ல, இது கோடை வெப்பத்தில் குழந்தைகள் சுகாதாரப் பிரச்னைகளுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான்.

இதுவரை கற்பிக்காத பாடங்களை,தற்போது கற்பித்து விடலாம் என அரசு நினைக்கலாம்.ஆனால் இது சில்லுனு ஒரு மழைக்காலம் அல்ல.. சுள்ளுனு ஒரு வெயில் காலம். மாணவர்களுக்குத் தேர்வுகள் தேவைதான். அதனைப் பள்ளிகள் திறந்தபின்கூட,நடத்திக் கொள்ள முடியும்.தவிக்கிற நேரத்தில் தண்ணீர்தான் தேவை, தத்துவங்கள் அல்ல..பசிக்கிற நேரத்தில் உணவுதான் தேவை, போதனைகள் அல்ல..

வரலாறு காணாத வெயில் கடந்த 15 நாள்களாக வாட்டி வதைக்கும்  நேரத்தில், நீர்க்கடுப்பு, சளி, காய்ச்சல், தலைச்சுற்றல், நீர்ச்சத்துக் குறைபாடு என்பவை வியர்வையில் குளிக்கும் மாணவர்களிடம் அதிக அளவில் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இன்று அக்னியும் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில்  ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுக்கு தற்போது வேண்டாம் அக்னிப் பரீட்சை

இப்படிக்கு >>>> கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம்சதிஷ்குமார்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top