Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

தமுஎகச சார்பில் புதுக்கோட்டையில்  உலகத் திரைப்பட விழா:

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற் தமுஎகச கூட்டத்தில் பேசுகிறார் அச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் முத்துநிலவன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் உலகத் திரைப்பட விழா புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் கி.ஜெயபாலன் ஆகியோர் முன்வைத்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன், மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் உலகத் திரரைப்பட விழாவை புதுக்கோட்டையில் நடத்துவது, அடுத்தடுத்த மாதங்களில் கவிதை, சிறுகதை, நாவல், ஓவியம், வீதி நாடகங்கள் குறித்து வாசிப்பு மற்றும் பயிற்சி முகாம்களை நடத்துவது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், இரா.தனிக்கொடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top