Close
செப்டம்பர் 19, 2024 11:25 மணி

வாசிப்பும் ஒரு வகையான தொழில் நுட்பம்தான்: நடிகை ரோகிணி பேச்சு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், தமுஎகச மாநில துணைத்தலைவர் நடிகை ரோகிணி

வாசிப்பும் ஒரு வகையான தொழில் நுட்பம்தான் என்றார் திரைப்பட நடிகையும் தமுஎகச மாநில துணைத் தலைவருமான ரோகிணி.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தி வரும் 5-ஆவது புத்தகத் திருவிழாவின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர்  மேலும் பேசியதாவது:

குழந்தைகளுக்கு நினைவாற்றல் இருப்பதில்லை எனக் கூறுகி றோம். ஒரு காலத்தில் நம்மிடம் தொலைபேசி டைரி இருந்தில் லை. பலரின் தொலைபேசி எண்கள் நம்முடைய மூளையில் பதிவாகியிருந்தது.

இப்போது அப்படியல்ல. ஓடியாடி விளையாண்டு திரிந்த நேரம் போன பிறகு, எப்போதாவது தொலைக்காட்சிகளில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படங்கள் ஓடின. மற்றபடி தொலைக்காட்சிகள் வாழ்வை ஆக்கிரமித்ததில்லை.

நேரத்தை எப்படிச் செலவழித்தோம் என்றால் ஒவ்வோர் இடத்தையும் தேடித்தேடிச் சென்றிருக்கிறோம். நண்பர்களு டன் சேர்ந்து எத்தனையோ இடங்களுக்குச் சென்று வந்திருக் கிறோம். நம்மிடம் நிறைய கேள்விகள் இருந்தன. அவற்றை யெல்லாம் பெற்றோரிடம் கேட்டிருக்கிறோம். இப்போதெல் லாம் யாரும் கேள்வி கேட்பதே இல்லை.

நம்மை செல்போனும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் ஆக்கிரமித்திருக்கின்றன. அரிதாக சில நல்ல விஷயங்களும் இங்கிருந்தெல்லாம் கிடைக்கிறது என்பதையும் மறுக்கவில் லை. அதிகம் வாசிப்போரின் மூளை நரம்புகள் புத்துணர்ச்சி யோடு இருக்கின்றன. வாசிப்பும் ஒரு வகையான தொழில் நுட்பம்தான்.
எதை வாசிக்க வேண்டும்? எதை வாசிக்கக் கூடாது? என்றும் இளைய தலைமுறைக்கு சொல்லித் தர வேண்டும். உங்கள் வாழ்வில் எது பிரச்னையாக இருக்கிறதோ அதைக் கண்டடைந்து, அந்தப் பிரச்னைக்கு தீர்வு எங்கே இருக்கிறதோ அதைத் தேடி வாசிக்கச் சொல்ல வேண்டும்.

பொதுவாக யாருக்கோ நடந்த பிரச்னைகளை நாம் தெரிந்து கொள்வது என்பது வெறும் செய்தி மட்டும்தான். சுவாரசியமாகக் கேட்டுவிட்டு சென்றுவிடுவோம். நம்முடைய பிரச்னையைப் பற்றி யார் பேசியிருக்கிறார்கள், அதற்கான தீர்வைப் பற்றி யார் பேசியிருக்கிறார்கள் என்பதைத் தேடிப் படிக்க வேண்டும். ஒரு புத்தகத்தை குழந்தை வாசித்துவிட்டால், அந்தப் புத்தகம் அக்குழந்தையைத் தொடர்ந்து வாசிக்க வைத்துவிடும்.

மூடநம்பிக்கைகளை வளர்க்கும், பிற்போக்குத் தனத்தை வளர்க்கும் எதுவும் நமக்குத் தேவையில்லை. எல்லா நேரமும் நல்ல நேரம்தான். நம்முடைய மனது நிம்மதியாக, நல்ல எண்ணங்களோடு இருந்தால் அந்த நேரம் எல்லாம் நல்ல நேரம்தான். மற்றவர்களைப் பற்றி நாம் தவறாக நினைத்தால் அந்த நேரம்தான் கெட்ட நேரம்.

பெண் குழந்தைகள் படிப்பது என்பது ஒரு காலத்தில் சவாலான காலம். இப்போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் படிக்க வைக்கிறோம். தடைகளை உடைத்ததால் பெண் கல்வி வாய்த்திருக்கிறது. அதேபோலத்தான் பெண்ணடிமைத்தனத்தையும் உடைக்க வேண்டும் என்றார்.

தமுஎகச சார்பில் புத்தகப் பேரணி…

புதுக்கோட்டை
புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவையொட்டி நடந்த தமுஎகச ஊர்வலத்தில் பங்கேற்ற மாநில துணைத்தலைவர் நடிகை ரோகிணி

முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழாவையொட்டிய விழிப்புணர்வு புத்தகப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணா சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக புத்தகத் திருவிழா நடைபெறும் நகர்மன்ற வளாகம் வரை நடைபெற்ற பேரணிக்கு, சங்கத்தின் துணைத் தலைவரும், திரைப்பட நடிகையுமானரோகிணி தலைமை வகித்தார்.
கவிஞர் தங்கம்மூர்த்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பிரகதீஸ்வரன், மாநிலத் துணைச் செயலர் நீலா, மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வன், மாவட்டச் செயலர் ஸ்டாலின் சரவணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், இரா.தனிக்கொடி, மாவட்டப் பொருளாளர் ஜெயபாலன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஊர்வலத்தில்; பாண்டியன் சிலம்புப் பாசறையின் சார்பில் சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top