Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில்  37 -ஆவது தேசிய கண்தான இருவார விழா தொடக்கம்

புதுக்கோட்டை

தேசிய கண்தான இருவார விழாவையொட்டி கண்தானம் அளித்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச்சான்று வழங்குகிறார், ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  37 -ஆவது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு கண்தானம் வழங்கிய குடும்பத்தினர் மற்றும் அதற்கு உதவியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  37 -ஆவது தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு, கண்தானம் வழங்கிய குடும்பத்தினர் மற்றும் அதற்காக உதவியவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  (26.08.2022) சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

37வது தேசிய கண்தான இருவார விழா ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வாக அரவிந்த் கண் மருத்துவமனையும், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையும் இணைந்து கண்தானம் வழங்கிய 25 குடும்பத்தினரையும், அதற்கு உதவியவர்களுக்கும்  இறந்தவர்களின் குடும்பத்தையும், கண்தானத்திற்கு உதவியவர்களுக்கும் ஆட்சியர் கவிதா ராமு, சான்றிதழ் வழங்கிடு கௌரவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், அரவிந்த் கண் மருத்துவமனை மேலாளர் சரவணன், அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top