Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

பலத்த மழையால் நிரம்பி வழியும் மதுரை வண்டியூர் கண்மாய்

மதுரை

மதுரை வண்டியூர் கண்மாய் மதகுகளில் வெளியேறும் உபரி நீர்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் மதுரை வண்டியூர் கண்மாய் நிரம்பி வழிகிறது.

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கண்மாய்களுக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.  இதனால் மாவட்டத்தில் உள்ள வண்டியூர் கண்மாய், பரவை கண்மாய், வடகரை கண்மாய், தென்கரை கண்மாய் உள்ளிட்ட பல கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மதுரை வண்டியூர் கண்மாய் மதகுகளில் நீர் அதிகமாக வெளியேறுகிறது.

மதுரை
மதுரை தாசில்தார்நகரில் சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்

மதுரை தாசில்தார் நகர் மருதுபாண்டியர் தெருவில், மழைநீர் வடிய வழியில்லாமல் குளம் போல காட்சியளிக்கிறது. மேலும் பலத்த மழையால் மதுரை நகரில் பல தெருக்களில் உள்ள சாலைகளில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கின்றது. இதனால் பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டுனரும் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top