Close
செப்டம்பர் 20, 2024 1:19 காலை

தீபாவளி பண்டிகை… புதுகை நகரில் கீழ ராஜவீதியில் புறக்காவல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை

பைல் படம்

புதுக்கோட்டை நகர உள்கோட்ட நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வருகின்ற 24.10.2022ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கீழராஜ வீதியில் உள்ள அண்ணாசிலை அருகில்  அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை    புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே  (21.10.2022) வெள்ளிக்கிழமை  திறந்து வைத்தார்.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில்,கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி ஆகிய நான்கு  வீதிகள் மற்றும் திலகர் திடல், சங்கர மடம் ரோடு ஆகிய இடங்களில்  ஒரு காவல்துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவல் ஆய்வாளர்களும், 8 காவல் உதவி ஆய்வாளர்களும், 60 காவலர்களும் , 50 ஊர்க்காவல் படையினரும், குற்றப்பிரிவு காவலர்களும்,  பாதுகாப்பு பணிக்காக  நியமிக்கப்பட்டுள்ளனர் .

நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி  கேமராக்கள் பொருத்தப்பட்டுகண்காணிக்கப்பட்டு  வருகிறது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து வசதிகள் மாற்றியமைக் கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை  தகவல் வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top