Close
செப்டம்பர் 20, 2024 3:36 காலை

தேசியஒற்றுமை நாளை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் ஒற்றுமை ஓட்டம் 

புதுக்கோட்டை

தேசியஒற்றுமை நாளை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் ஒற்றுமை ஓட்டம்  (மினிமாராத்தான்)

தேசியஒற்றுமைநாளைமுன்னிட்டுபுதுக்கொட்டைதிருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் ஒற்றுமை ஓட்டம் மினிமாரத்தான் நடைபெற்றது.
மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் தேசிய ஒற்றுமைதினத்தை முன்னிட்டு 31.10.2022 காலை 7 மணிக்கு பள்ளி மாணவர்களின் ஒற்றுமை ஓட்டம் நிகழ்த்தப் படவேண்டும் என்ற மாவட்டஆட்சித் தலைவரின் அறிவிப்பின் படி திங்கள்கிழமை காலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.

இந்தமினிமாரத்தான் அருங்காட்சியகம் அருகில் தொடங்கி மேலமேட்டுத்தெருமற்றும் திருவப்பூர்  முத்துமாரி யம்மன் கோயில் வழியாகபள்ளி வளாகம் வந்தடைந்தது.  மேலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அனைத்து மாணவர்களும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

புதுக்கோட்டை
புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி சார்பில் நடைபெற்ற மின் மாரத்தான் போட்டி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள்

முன்னதாக மாணவர்களின் ஒற்றுமை ஓட்டத்தைபள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் கமல்ராஜ், சுதா, கோகிலா, ராஜா, காசாவயல் கண்ணன், அழகன், உதயகுமார், கனியன் செல்வராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்விஆசிரியர் நீலகண்டன் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top