Close
செப்டம்பர் 20, 2024 5:36 காலை

திருவொற்றியூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கி பீகார் தொழிலாளி பலி

சென்னை

திருவொற்றியூரில் நேரிட்ட விபத்தில் கூலித்தொழிலாளி பலி

சென்னை, திருவொற்றியூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் கெலாட் புதன்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் கெலாட் (31). இவர் திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்  இவர் அருகில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்.
புதன்கிழமை சத்தியமூர்த்தி நகர் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது அப்போது விரைவாக வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அசோக் கெலாட்  உயிரிழந்தார்.
இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், சத்தியமூர்த்தி நகர் எண்ணூர் விரைவு சாலையில் பகுதியில் இன்று மதியம் குடிபோதையில் இருந்த அசோக் கெலாட் நிலை தடுமாறி கீழே விழுந்த போது அவ்வழி யாக சென்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி   பின் சக்கரம் ஏரி இறங்கியதில்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து மனைவி  பிரத்திமா தேவி, சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதனையடுத்து சம்பவ நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி  கண்டெய்னர் லாரி வாகன  எண்ணை வைத்து போலீசார் கண்டெய்னர் லாரி ஒட்டுனரை தேடி வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top