Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

ஈரோட்டில் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் சந்திப்பு கூட்டம்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் சந்திப்புக்கூட்டம்

ஈரோடு எஸ்.வி.என் பள்ளி வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 07.11.1962 அன்று வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 75 பேர் பயிற்சியில் சேர்ந்து பிறகு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி என பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி, பல பதவி உயர்வுகளைப் பெற்று, காவல்துறை உயர் அதிகாரிகளாக  செயலாற்றி 1996 -ஆம் ஆண்டு முதல் ஒவ்வொருவராக பணி ஓய்வு பெற்று, இறுதியாக 2002-ல் ஆண்டில் அனைவரும் ஒய்வு பெற்றனர்.

இவ்வாறு ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள் வருடத்திற்கு ஒரு முறை அனைவரும் ஒன்றிணைந்து தங்களது மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான ஒய்வு பெற்ற காவல் துறை நண்பர்களின் சந்திப்புக் கூட்டமானது ஈரோடு எஸ்.வி.என் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஒய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி நஞ்சன் தலைமை வகித்தார்.  முத்துசாமி வரவேற்புரை ஆற்றினார்.  இக்கூட்டத்தில் ஒய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மற்றும் எஸ்.வி.என். பள்ளியின் நிரந்தர தலைவருமான நல்ல . கோவிந்தசுவாமி சிறப்புரையாற்றி னார்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஒய்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள் தங்களுக்கு இடையேயான நட்பையும் அனுபவங்களையும் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.என் பள்ளியின் சார்பாக பள்ளியின் இணை செயலாளர் ரங்கசாமி, முன்னாள் செயலாளர் சின்னுசாமி, இயக்குநர் நந்தகுமார்,முதல்வர் து. தர்மராஜ் மற்றும் ஆசிரிய இயக்குனர் லட்சுமி  ஆகியோர் கலந்து கொண்டனர் .  இறுதியாக பெருமாள் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top