Close
செப்டம்பர் 20, 2024 3:34 காலை

பொன்னமராவதியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர்  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தேசிய வாக்காளர் வரைவு பட்டியல் நவ.9 -ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வருவாய் துறையின் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா ஆகியோர் சைக்கிள் பேரணியை  கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.

இதில் பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பொன்னமராவதி, புதுப்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்காளர் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top