Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து விபத்து..

ஈரோடு

சென்னிமலை அருகே கவிழ்ந்து கிடக்கும் லாரி

சென்னிமலை அருகே  முகாசிபிடாரியூர் – பனியம்பள்ளி ரோட்டில் இச்சிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தார் ரோட்டின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதனால் இந்த வழியே வாகனங்கள் செல்வதற்காக பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை ஒட்டியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பிளைவுட் ஏற்றி சென்ற ஒரு லாரி மாற்றுப் பாதை வழியாக செல்லும்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விட்டது. மழை பெய்து வருவதால் மாற்றுப் பாதையில் பள்ளம் ஏற்பட்டு லாரி கவிழ்ந்ததாக கூறப்படு கிறது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top