Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

நேசம் அறக்கட்டளை சார்பில் 925 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

நேசம் அறக்கட்டளை சார்பில் 925 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சென்னையைச் சேர்ந்த நேசம் அறக்கட்டளை சார்பில் 925 பள்ளி குழந்தைகளுக்கு கல்விக்கான தளவாட சாமான்கள்  வழங்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வரும் நேசம் அறக்கட்டளை சார்பில் 22 -ஆவது ஆண்டு கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  சென்னையில் நடைபெற்றது.
இதில் 21 ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 558 குழந்தைகள்,  13 கிராமப்புற படிப்பகங்களைச் சேர்ந்த 367 குழந்தைகள் என மொத்தம் 925 குழந்தைகளுக்கு உடைகள், புத்தகப் பை, துண்டு, நோட்டு புத்தகங்கள், சோப்பு உள்ளிட்ட தொகுப்பு அடங்கிய பை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் 5 முதியோர் இல்லங்களை சேர்ந்த 225 பேருக்கு அவர்களுக்கு தேவையான போர்வை, மருந்து பொருட்கள் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top