Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

குடியாத்தம்: சாலைவிபத்துகளால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கல்

வேலூர்

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

குடியாத்தம் வருவாய் கோட்டத்தில் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 கோடி 64 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் வழங்கினார்.

வேலூர் மாவட்டம்,   குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் எம்எல்ஏ- அமலுவிஜயன் பங்கேற்று முதலமைச்சரின் நிவாரண நிதியுதவியை வழங்கினார்.

குடியாத்தம் வருவாய் கோட்டத்தில் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து குடியாத்தம் வருவாய் கூட்டத்திற்கு உட்பட்ட 300 பேருக்கு இரண்டு கோடியே 64 லட்ச ரூபாய் நிவாரண உதவித் தொகைகக்கான காசோலைகளை வழங்கினார்.   நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

...வேலூர் நிருபர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top