Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

திருவருள் பேரவை சார்பில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்து

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருவருள் பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்

புதுக்கேட்டை மாவட்டம் அனைத்து சமய கூட்டமைப்பான திருவருள் பேரவை கடந்த 40 ஆண்டுகளாத தொடர்ந்து பொங்கல், ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் சமுக நல்லிணக்க மேம்பாட்டிற்காக வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுவருகிறது.

அதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் திருவருள் பேரவை சார்பாக கிறிஸ்தவ சமய நண்பர்களை வாழ்த்துவதற்காக மார்த்தாண்டபுரம் ஆர் சி  தேவாலயம் மற்றும் மச்சுவாடி டி இ எல் சி  தேவாலயத்துக்கு நேரில்  சென்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதில் துணைத்தலைவர்கள் ஹாஜி முகமது சபியுதீன், மருத்துவர் எஸ். ராமதாஸ், செயலாளர் மருத்துவர் சலீம், ராமையா, மாவட்ட வர்த்தக கழக நிர்வாகிகள் ஹாஜி சாகுல் ஹமிது, அஸ்ரப் அலி, ராஜா முகமது, சவரிமுத்து, ரோட்டரி சங்க சார்பாக. பி. கருப்பையா, கதிரேசன், ராஜா முகமது.

வாசகர் பேரவை செயலர் பேராசிரியர் எஸ்.விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், கருணாகரன்,  மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் சங்க சார்பாக ராஜ்குமார் உள்பட திரளானோர்  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் கூறினர். இஸ்லாமிய பைத்துல்மால் கமிட்டி சார்பாக ஏ.இப்ராஹிம் பாபு நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top