Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

சாத்தூர் அருகே ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில் பள்ளி மாணவர்கள் இருவர் காயம்

சிவகாசி

சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில், பள்ளி மாணவர்கள் இருவர் காயம்

சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில், பள்ளி மாணவர்கள் இருவர் காயமடைந்தனர்.

சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறி ஏற்பட்ட விபத்தில் சிக்கி, பள்ளி மாணவர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி, கலைஞர் காலனியைச் சேர்ந்தவர்கள் வைரவன் (14),
வேலாயுதம்(9). பள்ளி மாணவர்களான இவர்கள் இருவரும், அந்தப் பகுதியில் உள்ள ஓடைப் பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, ஓடையில் வீசப்பட்டிருந்த பட்டாசு ஆலை கழிவுகளில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சிக்கிய மாணவர்களின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது.

உடனடியாக, அருகில் இருந்தவர்கள் சிறுவர்கள் இருவரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீக்காய சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடையில் பட்டாசு கழிவுகளை யார் கொட்டியது, இல்லையென்றால் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர் கள் கழிவுகளை கொட்டினார்களா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top