Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

புதுக்கோட்டை நகரில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஜன.10 முதல் 13 வரை மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு முகாம்

புதுக்கோட்டை உபகோட்ட மின்வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின்இணைப்புடன்- ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடைபெறுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதுக்கோட்டை கோட்டம் நகர் புதுக்கோட்டை உபகோட்டம் பிரிவு அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின்இணைப் புடன் ஆதார் எண் இணைப்பது சம்பந்தமாக சிறப்பு முகாம் 10.01.2023 முதல் 13.01.2023 வரை காலை 9:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது.

ஆகவே மின்நுகர்வோர்கள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிரிவு அலுவலகம்-  நாள் மற்றும் நேரம் -சிறப்பு முகாம் நடை பெறும் இடம்-(காலை 9:00மணி முதல் மாலை 05:00மணி வரை)

எனவே தற்பொழுது மின்இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என்பதால் மின் இணைப்பு விவசாய மின்இணைப்பு மற்றும் குடிசை மின்இணைப்பு (HUT) நுகர்வோர்கள் இந்த முகாமை அவசியம் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென புதுக்கோட்டை, நகர்- மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அ. சையது அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top