Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

சிங்கப்பூர் நிறுவனம் சார்பில் நரிக்குறவர் காலனி மக்களுக்கு ஆயத்த ஆடைகள் வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகேயுள்ள நரிக்குறவர் காலனி மக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த எஸ்.பி.ஜி மரைன் பிரைவேட் லிட் கம்பெனி உரிமையாளர் லிம் டெங் செங்  2 பெட்டிகளில் நன்கொடையாக கொடுத்த ஆயத்த ஆடைகளை, அவர் சார்பாக கம்பெனியின்  மனித வள மேம்பாட்டு அலுவலர் ஏசிஎஸ். பாரத்  1.1.2023 அன்று ஆயத்த ஆடைகளை வழங்கினார்.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஆர். சிவக்குமாரிடம் ஒப்படைத்த ரெங்கம்மாசத்திரம் நரிக்குறவர் காலனிவாசிகளுக்கு வழங்குவதற்காக ஹேண்டில் தொண்டு நிறுவன அலுவலர்  ஆர்.உமாதேவி  ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், சங்க நிறுவனர் மாருதி கண.மோகன்ராஜா, பொருளாளர் முகமதுஅப்துல்லா, வருங்கால தலைவர்  .அசோகன், வருங்கால செயலாளர் அரசகுமார், வருங்கால பொருளாளர் சங்கர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் இப்ராஹிம்பாபு, பரூக் ஜெய்லானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top