Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

சுதந்திரப் போராட்ட மாவீரர் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா

கோபிச்செட்டிபாளையம்

கோபி பேருந்து நிலையத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரர் குணாளன் நாடார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

சுதந்திரப் போராட்ட மாவீரர் குணாளன் நாடார் 267 -ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக  செயலாளர் கே. ஏ. செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில், அதிமுக நகர செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் எம்பி சத்திய பாமா மற்றும் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top