Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

இன்னர்வீல் ரோட்டரி சங்கம் சார்பில் உயர் கல்வி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை

புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இன்னர் வீல் சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாம்

இன்னர்வீல் ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்தியஉயர் கல்வி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் இன்னர்வீல் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய உயர்கல்வி வகுப்பு மாணவிகளுக்கான “சுத்தம் மற்றும் பாதுகாப்பு” விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை, பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை
விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற மாணவிகள்

பெண் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் பாதுகாப்பு பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் உதவி விரிவுரையாளர் டாக்டர் தமிழரசி விளக்கங்கள் மற்றும் மாணவிகளின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் இன்னர்வீல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அருணோதயம் ஜெயராமன் மற்றும் செயலாளர் சாந்தி சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.  முன்னாள் இன்னர்வீல் சங்கத்தின் தலைவர் அனுராதா அவர்கள் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார். முன்னதாக பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் வரவேற்புரை வழங்கினார். ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top