Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

பதவியை ராஜினாமா செய்த அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர்

ஈரோடு

கூட்டுறவு சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த வேட்பாளர் கே.எஸ். தென்னரசு

அதிமுக எடப்பாடி அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ தென்னரசு கூட்டுறவு சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு துணி நூல் பதனிடும் ஆலையின் தலைவராக பதவி வகித்து வந்தவர் தென்னரசு. இவர் தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு துணி நூல் மற்றும் பதனிடும் ஆலையின் தலைவர் பதவியினை நேற்று தென்னரசு ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஈரோடு சரக கைத்தறி உதவி ஆணையாளரிடம் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top