Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

செவலூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கல்

புதுக்கோட்டை

செவலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன..

செவலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி  அருகே உள்ள செவலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 600 தென்னை மரக்கன்றுகளை ஊராட்சித் தலைவர் திவ்யா முத்துக்குமார் முன்னிலையில்  வேளாண் இணை இயக்குநர்  பெரியசாமி விவசாயிகளுக்கு வழங்கினார்.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கர், வார்டு உறுப்பினர்கள், வேளாண் துணை உதவி, வேளாண் அலுவலர் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top