Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் ஆம் ஆத்மி தொழில்சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை

பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் ஆம் ஆத்மி தொழிலாளர்கள் சங்கம் துவக்கம், பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் ஆம் ஆத்மி தொழிலாளர்கள் சங்கம் தொடக்கம் மற்றும்  பெயர்ப் பலகை திறப்பு விழா  நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்து பணிமனை முன்பு  நடைபெற்ற ஆம் ஆத்மி தொழிலாளர்கள் சங்க தொடக்க விழாவுக்கு  மண்டல செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார்.மாநில செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார்.

ஆத்மி கட்சி மாநில தலைவர் சுவாமி அனைவரையும் வரவேற்று பேசி, கட்சி கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அப்துல்ஜாபர் ஆம் ஆத்மி பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் பேசிய ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என உறுதி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில பொருளாளர் பழனிச்சாமி, மாநில துணைத் தலைவர்கள் பெரியசாமி, வடிவேல், இணைத்தலைவர்,முரளி, மாநில இணைச் செயலாளர் சண்முக சுந்தரம்,புதுக்கோட்டை மண்டல தலைவர் ரெங்கன்,மண்டல செயலாளளர் நாகராஜன்,மண்டல பொருளாளர் பாலு,மத்திய சங்க துணைத்தலைவர் மலைச்சாமி,மத்திய சங்க துணைத்தலைவர் ஜெய்சங்கர், மத்திய சங்க துணைச்செயலாளர் மதியழகன், மத்திய சங்க துணைச்செயலாளர் தென்னரசு.

மத்திய சங்க துணைத்தலைவர் தங்க பழனிச்சாமி, பொன்னமராவதி கிளைத் தலைவர் கண்ணன்,செயளாலர் பெரியசாமி,பொருளாளர் சிதம்பரம், துணைத்தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பொன்னமராவதி போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் அருண்குமாரை ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top