Close
செப்டம்பர் 19, 2024 11:18 மணி

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (நாட்டு நலப்பணித் திட்டம்) இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.குமரேசன் தலைமையில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜா, துணைத்தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான், கண்ணன் ஆரவாமுதன், ஜான்சி ராணி, இளநிலை பயிற்சி அலுவலர் ரமேஷ், முன்னிலை வகித்தனர்

பேரணி பழைய பேருந்து நிலைய கோர்ட் வளாகத்தில் துவங்கி அண்ணா சிலை, கீழ ராஜ வீதி, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றத்தில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டை, நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜோதிமணி செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top