Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

பெரியவீரசங்கிலி ஊராட்சியில் 16-வது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி பூஜை

ஈரோடு

பெருந்துறை ஒன்றியம் பெரியவீரசங்கிலி ஊராட்சியில் 16-வது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் சிமெண்ட் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், பெரியவீரசங்கிலி ஊராட்சியில் 16-வது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து 6 லட்சம் மதிப்பீட்டில் கிரேநகரில் புதிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளரும் 16-ஆவது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான செல்வம் தலைமை வகித்தார்.

பெருந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.சின்னச்சாமி முன்னிலை வகித்தார். பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி பூமி பூஜை செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பெருந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க.அவைத் தலைவர் என்.ஆனந்தன், பெரியவீரசங்கிலி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ராதாமணிசிவக்குமார், சின்னவீரசங்கிலி ஊராட்சி மன்ற தலைவர் டி.கண்ணம்மாள், பெருந்துறை தெற்கு ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் லாரன்ஸ்அடைக்கலம், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top