Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை: அமைச்சர் உதயநிதி தொடக்கம்

சென்னை

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் , சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜா, சேதுகார்த்திகேயன் ஆகியோர்

புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தொடக்கி வைத்து, அதற்கான இலச்சினை (லோகோ) யை வெளியிட்டார்.

சென்னை
புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையை தொடக்கி வைத்த, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் 18.4.2023 அன்று நடைபெற்ற நிகழ்வில்  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்விஎஸ். ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர்சேது.கார்த்திகே யன், மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலாளர் செழியன், திமுக நிர்வாகிகள் மதியழகன் மணிமாறன் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் , ஹரிகிருஷ்ணன், ஆகாஷ், மணிகண்டன் மாரிமுத்து, சித்தார்த், மணிகண்டன் பிரவீன், வனிதா, அகிலா, பிரீத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top