Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

அறமனச்செம்மல் சீனுசின்னப்பா முதலாண்டு நினைவு நாள்: மஹராஜ் மஹாலில் ஐந்து நாள் நிகழ்வுகள் தொடக்கம்

புதுக்கோட்டை

பேக்கரி சீனுசின்னப்பா முதலாண்டு நினைவு நாள் நிகழ்வில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய சான்றோர்கள்

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனர் அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக பல்கலைத் திறன் போட்டிகள், யோகாசனப் போட்டி, இரத்ததான முகாம், சிலம்பம், கராத்தே போட்டிகள், கவியரங்கம், பரிசளிப்பு விழா என ஐந்து நாள் நிகழ்வின் துவக்க விழா சின்னப்பா நகரில் உள்ள மஹராஜ் மஹாலில் நடைபெற்றது.

புதுக்கோட்டை
கலைப் போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகள்

விழாவினை திருக்குறள் கழகத்தின் தலைவர் க.இராமையா  துவங்கி வைத்தார், மாவட்ட வர்த்தக கழகத்தின் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சவரிமுத்து, பொருளாளர் கதிரேசன், கிங் டவுன் ரோட்டரி சங்க தலைவர் விக்னேஷ், செயலாளர் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இளங்கோவடிகள் மன்ற செயலர் சத்தியராம் ராமுக்கண்ணு, தொல்பொருள் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புவனேஸ்வரி பாண்டியன் வரவேற்றார்.

புதுக்கோட்டை

முதல் நாளான நேற்று அபாகஸ், தமிழ், ஆங்கிலம் கையெழுத் துப் போட்டி, ஓவியம் என பல்கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது 750 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top