Close
செப்டம்பர் 20, 2024 3:37 காலை

சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க அதிமுக சார்பில் சார்பில் கோபியில் நீர் மோர் பந்தல் திறப்பு

ஈரோடு

கோபி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

அதிமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரில்  நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் கோடையால் பொதுமக்கள் தவிக்கும் நிலையை போக்கும் வகையில்  கோடைகால நீர் மோர் பந்தலை  திறக்க வேண்டுமென தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி  ஆணையிட்டிருந்தார்.

அதன்படி, கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே. ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் உள்ளிட்ட குளிர் பானங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மவுதீஸ்வரன், பிரினியோ கணேஷ், அருள்ராமசந்திரன், முத்துரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top