Close
செப்டம்பர் 20, 2024 1:21 காலை

திருவொற்றியூர் சமூக சேவை சங்கம் சார்பில் நூல் வெளியீடு

சென்னை

திருவொற்றியூர் சமூக சேவை சங்கம் சார்பில் திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மனித குலம் ஒன்றுபட சத்திய நூல்' என்ற நூலினை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி சங்கர் வெளியிட தனலட்சுமி கோட்டீஸ்வரன் பெற்றுக் கொண்டார். உடன் நூலாசிரியர் த.கோட்டீஸ்வரன்

திருவொற்றியூர் சமூக சேவை சங்கம் சார்பில்  நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவில். சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. சங்கர் கலந்து கொண்டு,  ‘மனித குலம் ஒன்றுபட சத்திய நூல்‘ என்ற நூலினை வெளியிட்டார். முதல் பிரதியை  தனலட்சுமி கோட்டீஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் நூலாசிரியர் த.கோட்டீஸ்வரன், சங்கத்தின் தலைவர் மு. தனரமேஷ், செயலாளர் அருண்குமார், அறங்காவலர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top