Close
செப்டம்பர் 20, 2024 1:43 காலை

புதுகை பிரசன்னவெங்கடாஜலபதி கோயில் சித்திரை பௌர்ணமி வழிபாடு

புதுக்கோட்டை

புதுகை பிரசன்ன வெங்டாஜலபதி கோயிலில் நடந்த சித்திரை பௌர்ணமி வழிபாடு

புதுக்கோட்டை ஐயர் குளம்மேல்கரை பிரசன்னவெங்கடா ஜலபதி கோயிலில்    சித்திரை  பெளர்ணமி விழா வழிபாடு நடந்தது.

புதுக்கோட்டை வடக்கு 4 -ஆம் வீதி  ஐயர் குளம் மேல்கரை அமைந்திருக்கும்ஸ்ரீபிரசன்னவெங்கடாஜலபதி திருக்கோயி லில் நடந்த  சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

ஆலயத்தில் உள்ள மகாலெட்சுமிக்கு சாமிக்கு   பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்துநேர்த்திக்கடனை  நிறைவேற்றினர். பின்னர்    மகாலெட்சுமிக்கு    பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பல்வேறு  வகையான அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மாலையில் மஞ்சள் காப்பு மலர் அலங்காரத்தில்மகா தீபாராதனைநடைபெற்றது.   ஏற்பாடுகளை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலின்   குணசீலன் மற்றும் நிர்வாகிகள்  செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து   வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top