Close
செப்டம்பர் 20, 2024 6:23 காலை

பாஜக ஆட்சியை அகற்றுவோம்… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழுவிய நடைபயண பிரசாரம்

தஞ்சாவூர்

நாட்டின் ஒருமைப்பாட்டை , மத நல்லிணத்தை பாதுகாப்போம்!! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சையில் நடைபெற்ற நாடு தழுவிய பிரசார இயக்கம்

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பிஜேபி ஆட்சியை அகற்றுவோம்! நாட்டின் ஒருமைப்பாட்டை , மத நல்லிணத்தை பாதுகாப்போம்!! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய நடைபயண பிரசார இயக்கம் தஞ்சையில் இன்று தொடங்கியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மோடி ஆட்சியை அகற்றுவோம், நாட்டின் ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம், மாற்றத்தை நோக்கி அனைத்து மக்களையும் அணி திரட்டுவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியின் அவலங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மே 5-ஆம் தேதி துவங்கி பத்தாம் தேதி வரை அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், ஒன்றியங்கள், கிராமங்கள் வரை நடைபெறும் நடைபயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாநகர குழு சார்பில் இன்று காலை 9 மணிக்கு தஞ்சாவூர் பூச்சந்தை அருகில் தொடங்கியது .

நடை பயண பிரசார இயக்கத்திற்கு மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர் தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன் பிரசார இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மாநகரத் துணைச் செயலாளர் ஆர் .பி. முத்துக்குமரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வெ.சேவையா, ம.விஜயலட்சுமி, ஆர்.கே.செல்வகுமார், மாநகர நிர்வாகிகள் கே.கல்யாணி, ஆசிரியர் சுந்தரமூர்த்தி, பகுதி பொறுப்பாளர் கே மாரிமுத்து, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

.காலை 9 மணிக்கு பூச்சந்தையில் துவங்கிய நடை பயண பிரச்சார இயக்கம் பர்மா காலணி ,கலைஞர் நகர், அண்ணா நகர், ஈ.பி. காலனி, உழவர் சந்தை வழியாக மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம், ஆர்.ஆர்.நகர், காவேரி நகர், ராமநாதன் ரவுண்டானாவில் வந்து இரவு 8மணியளவில் முடிவுற்றது.

நடைப்பயண பிரசார இயக்கத்தில், குடும்பத்திற்கு 15 லட்சம் கொடுக்கப்படும் என்ற தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றப்படாதது, 450 ரூபாய்க்கு விற்ற சமையல் எரிவாயு தற்போது 1200 ரூபாயக உயர்ந்துள்ளது, ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதி .

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய உணவு பண்டங்கள் விலை உயர்வு, பெண்ணடிமை, ஆண்டான் அடிமை முறையை மீண்டும் கொண்டு வருகிற சனாதன தர்மம், மனுநீதியை வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கை, விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படாதது.

ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்யாதது, போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை சுருக்கியது,. 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 28% ஆக உயர்த்தி மக்களை துன்பத்திற்கு உள்ளாகியது, 50 லட்சம் கோடியாக இருந்த வெளிநாட்டு கடன் தற்போது 150 லட்சமாக கோடியாக உயர்ந்து நாட்டை திவாலாக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றது.

11 முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடியை தள்ளுபடி செய்தது, நாட்டின் இயற்கை வளம், கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க தாராள அனுமதி வழங்கியது,. மருத்துவம் , சுகாதாரத்தை வணிகமயமாக்கியது,

மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட சேவை நிறுவனங்களான துறைமுகங்கள்,. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்கள் ,ரயில் நிலையங்கள்,. அணு ஆயுத தொழிற்சாலைகள், வங்கி , மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட மத்திய,. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானி, அம்பானிகளிடம் தாரை வார்த்தது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள் அனைத்து பகுதி மக்களிடமும் வழங்கப்பட்டது. நாளை 10. 5 .2023 புதன்கிழமையும் மாநகராட்சியின் மற்ற இடங்களில் பிரசார இயக்கம்  நடைபெறுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top