Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

பயணியர் நிழல்குடை: கந்தர்வகோட்டை எம்எல்ஏ திறந்து வைப்பு

புதுக்கோட்டை

மேல முத்துடையான்பட்டியில் பயணியர் நிழற்குடை எம்.சின்னதுரை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

மேல முத்துடையான்பட்டியில் பயணியர் நிழற்குடையை
எம்.சின்னதுரை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலமுத்துடையான்பட்டியில் பயணியர் நிழற்குடையை  சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் வெள்ளனூர் ஊராட்சிக்கு உட்பட்டது மேலமுத்துடையான்பட்டி கிராமம். இங்கு கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

பணிகள் முடிக்கப்பட்ட நிழற்குடையை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதில் அன்னவாசல் திமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் கை.பழனிச்சாமி, பாரிவள்ளல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்ட குழு உறுப்பினர் டி.சலோமி, ஒன்றிய குழு உறுப்பினரகள் எம்.ஜோஷி, கே.தேவராஜன், ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top