Close
செப்டம்பர் 20, 2024 5:43 காலை

புதுக்கோட்டை அருகே ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி

புதுக்கோட்டை

ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் பாண்டியன் மற்றும் ஓம் நமச்சிவாயா உறுப்பினர்களுடன் சேர்ந்து ஏழை எளிய மக்களுக்கு  உதவும் வகையில் மாணவ, மாணவிகள் கல்வி பயில உதவித்தொகையும் மாற்றுத் திறனாளிகளுக்கு வண்டிகள் வழங்குவது, முதியோர் இல்லத்திற்கு உணவு மற்றும் உபகரணங்கள் வழங்குவது.  மேலும் விதவை பெண்களுக்கு தையல் இயந்திரன் பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கோட்டூர் பஞ்சாயத்திற்கு உள்பட்ட தெற்கு தாளம்பட்டி, வடக்கு தாளம்பட்டி  மற்றும் பரணிக்குடிப்பட்டி உள்ள அரசு பள்ளியில்  பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஓம் நமசிவாய நிர்வாகிகள் நோட்டு புத்தகம், வாட்டர் கேன், பை ஆகியவற்றை வழங்கினார்கள்.

ஏற்பாடுகளை சிங்கப்பூர் ஓம் நமசிவாய அறக்கட்ட ளை ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top