Close
செப்டம்பர் 20, 2024 1:40 காலை

முன்னாள் படை வீரர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்: பயனாளிகளுக்கு ரூ.1,88,986 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை

முன்னாள் ராணுவத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டமுன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தலைமையில்  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  முன்னாள் படை வீரர்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி  முன்னாள் படை வீரர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர், சார்ந்தோர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. மேலும் கடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டு நிலுவையிலுள்ள மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, திருமண மானியம், வங்கிக்கடன் வட்டி மானியம் மற்றும் கல்வி உதவித்தொகை பயனாளி களுக்கு ரூ.1,88,986 மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது என  ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) திரு.சி.விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top